districts

காவல்துறை தொந்தரவால் தற்கொலை நகைக்கடை உரிமையாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்

தஞ்சாவூர், ஜூன் 30 -

     காவல்துறை கொடுத்த தொந்தர வால் மனமுடைந்து, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நகைக்கடை உரிமையாளரும், இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை  முன்னாள் நகரச் செயலாளருமான, ரோஜா ராஜசேகரன் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை கட்சி அலுவலகத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் எம்.செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம், ஒன்றி யச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

    கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) முன்னாள் நகரச் செயலாளர் ரோஜா ராஜசேகரன் மறை விற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட் டது. திருச்சி கே.கே.நகர் காவல்துறை யினர் நகை திருட்டு வழக்கு தொடர் பாக, நகைக்கடை உரிமையாளரான ரோஜா ராஜசேகரன், அவரது மனைவி  ஆகியோரை மிரட்டி திருச்சி அழைத்து  சென்றுள்ளனர்.

     ரோஜா ராஜசேகரனையும், அவரது  மனைவியையும் இரவு நேரத்தில் இரு நாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத் துள்ளனர். மேலும் அவர்களை மிரட்டி  துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று அவரை நகை வணி கர்கள் சங்கத்தினர் பட்டுக்கோட்டை அழைத்து வந்துள்ளனர். காவல்துறை அத்துமீறல், திருட்டுப் பழி சுமத்தியது, நகை கேட்டு மிரட்டியது உள்ளிட்ட காவல்துறையின் தொந்தரவு காரணத் தால், ரோஜா ராஜசேகரன் மனமு டைந்து, கடந்த ஞாயிறன்று இரவு ரயில்  முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.  

     காவல்துறை துன்புறுத்தல் காரண மாக தற்கொலை செய்து கொண்ட ரோஜா ராஜசேகரன் குடும்பத்திற்கு, தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க  வேண்டும். இதில், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய சட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு  உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.