மதுரை, மார்ச் 31- அதிமுக பொதுச்செயலாளர் மதுரை யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், பேசுவதற்கு சரக் கில்லாமல் திமுக மூன்றரை ஆண்டுகளில் எதையுமே செய்யவில்லை. கடைசியில் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என விரக்தியோடு புலம்பிச் சென்றார். எடப்பாடியின் புலம்பலுக்கும் பொய்யு ரைக்கும் நெற்றியடி கொடுத்துள்ளார் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன். திமுக மதுரை மாவட்டச் செயலாளரும் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கோ.தளபதி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் வடக்கு சட்டமன்றத் தொகு திக்குட்பட்ட பகுதிகளில் சு.வெங்கடேசன் வெள்ளியன்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் வாக்காளர்கள் மத்தி யில் பேசியதாவது:- மதுரையில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி. திமுகவின் சாதனை யைச் சொல்லி நீங்க ஓட்டு கேட்கத் தயாரா என்று கேட்டுள்ளார். திமுக அரசின் சாதனைகளைச் சொல்லித் தான் ஓட்டு கேட்கிறோம். ஒவ்வொரு பெண்ணுக்கும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கியதையும்; லட்சக் கணக்கான மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை யில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை சொல்லித்தான் ஓட்டு கேட்கிறோம். உலக மெங்குமுள்ள மக்கள் வந்து பார்த்துச் செல்லக்கூடிய கீழடி அருங்காட்சியகத்தை சொல்லித் தான் ஓட்டு கேட்கிறோம் என்றார். பெண்களுக்கும் ஒவ்வொரு மாணவர் களுக்கும் உதவித்தொகை, காலை உணவுத் திட்டம் என திமுக மூன்றரை ஆண்டு களில் செய்த சாதனைகளை சொல்லித் தான் ஓட்டு கேட்கிறோம். மதுரையின் வளர்ச்சிக்காக இரண்டாவது சிப்காட், ஐடி தொழில்நுட்பப் பூங்கா அறிவித்த திட்டங் களை சொல்லித்தான் ஓட்டு கேட்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்ப டையில் கடந்த ஐந்தாண்டுகளில் செய்த 150 சாதனைகளை சொல்லித்தான் ஓட்டு கேட்கிறோம். மீண்டும் இது போன்ற நல்ல திட்டங்கள் தொடர அரிவாள்-சுத்தியல்- நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள். மதுரை உள்ளிட்ட 39 தொகுதிகளிலும் திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகளின் வேட்பா ளர்கள் வெற்றி பெற்றுச் சென்று மோடி அரசு நிறைவேற்றியுள்ள தொழிலாளர்-விவ சாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.