மயிலாடுதுறை, ஏப்.7- மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், வெளியூர்க ளிலிருந்தும் கல்லூரிக்கு வந்து செல்லும் சூழலில் கல்லூரி முடிந்து வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்க ளை பேருந்துகள் ஏற்றி செல்ல மறுப்பதால் மாணவர்கள் படியில் தொற்றி தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் அவல நிலை நீடித்து வருகிறது. இதனால் பலமுறை மாணவர்கள் கீழே விழுந்து காயமடை வதும் தொடர்கதையாகி வருகிறது. இது சம்பந்தமாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல முறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கைஇல்லையென்றும் உடனடியாக நடவ டிக்கை இல்லையெனில் போராட்டங்களை நடத்துவோம் என மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணி பாரதி தெரிவித்துள்ளார்.