தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் ஜாக் அண்ட் ஜில் பள்ளி மாணவர்கள் நேரடி அனுபவம் பெற பாபநாசம் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பார்ம், டிக்கெட் கவுண்டர், சிக்னல் ஆகியவற்றை நேரில் கண்டனர். மாணவர்களுக்கு நிலைய அதிகாரி ராம் குமார், ரயில் பயணிகள் சங்கத் தலைவர் சோமநாதராவ் உள்ளிட்டோர் உதவினர். இதில் பள்ளி தாளாளர் மைக்கேல், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.