districts

img

பனை விதை நடும் பணியில் ஏவிசி கல்லூரி மாணவர்கள்

மயிலாடுதுறை, அக்.3- மயிலாடுதுறையில் செயல்படும் ஏவிசி (தன்னாட்சி) கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கடற்கரை கிராமத்தில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது. சின்னங்குடி கடற்கரைகளில் சுமார் 300 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள், 11,500 பனை விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் புல முதன்மையர் முனைவர் எஸ்.மயில்வாகனன், துணை தேர்வு நெறியாளர் டி.எம்.சதீஷ்கண்ணன், சின்னங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் பனை விதைகளை நட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.