districts

img

பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய மாணவர்கள்

அறந்தாங்கி, ஜன.12 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி எல்.என்.புரம் பகுதியில் இயங்கி வரும் ஐடியல் மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடை பெற்றது.  விழாவிற்கு பள்ளித் தாளாளர் சேக்சுல்தான் தலைமை வகித்தார். சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி யில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் திருநாவுக்கரசர், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, அறந்தாங்கி நகர்மன்ற உறுப்பி னர்கள் காசிநாதன், கிருபாகரன் மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் கிராமிய தெம் மாங்கு இசை நடைபெற்றது. மக்கள் இசை கவிஞர் செல்ல தங்கப்பா, விஜய் டிவி புகழ் காளிதாசன், ஆனந்தி குழுவினரின் கிராமிய தெம்மாங்கு இசை நிகழ்ச்சி நடை பெற்றது.  செலக்சன் பள்ளி அறந்தாங்கி செலக்சன் கல்வி குழுமம் சார்பாக நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் கண்ணையன் தலைமை  வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஒன்றிய, மாநில அமைச்சரும், திருச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர், இராமநாதபுரம்  நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் கலந்து கொண்ட னர். சிறப்பு அழைப்பாளராக அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த் பங்கேற்றார். கவி கயா குழுவினர் ஆலம்பாடி பாஸ்கரன் தலைமையில் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளி முதல்வர் சுரேஷ் குமார் வரவேற்று பேசினார். ஆரம்ப சுகாதார நிலையங்கள் காரையூர் வட்டார புத்தாண்டு தன்முனைப்பாற்றல் குடும்ப விழா  மற்றும் சமத்துவ பொங்கல் விழா  காரையூர், கொப்பனாபட்டி, பொன்ன மராவதி, மேலத்தானியம், அம்மன்குறிச்சி, மேலைச்சிவபுரி ஆகிய ஆரம்ப சுகாதார நிலை யங்களில் கொண்டாடப்பட்டது.  மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஒரே மாதிரியான புத்தாடைகள் அணிந்து சமத்துவ பொங்கலிட்டனர். சிறிய  குழு விளையாட்டுகளும் போட்டி களும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட்டன. வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தார்.  கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யங்கள், மருத்துவர்கள், செவிலி யர்கள், கிராம சுகாதார செவிலியர்கள்,  மற்ற துறை அலுவலர்களுக்கு சிறப்பு  விருதுகள் வழங்கப்பட்டன.  பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சமத்துவப் பொங்கல் விழா பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) காஜாமுகைதீன் தலைமையில் நடைபெற்றது. உதவி யாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நித்யா, துணைத்  தலைவர் ஷீலா ராணி, சத்துணவு  மற்றும் அங்கன்வாடி ஒருங்கி ணைப்பாளர்கள், பெற்றோர்கள் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றனர். பாபநாசம் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளிச் செயலர் வரத ராஜன் தலைமை வகித்தார். தலை மைச் செயலர் கலியமூர்த்தி, நிதிச் செயலர் பொம்மி, முதல்வர் தீபக் முன்னிலை வகித்தனர்.  தஞ்சாவூர் கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் (ஓய்வு) குணசேகரன் சிறப்புரையாற்றினார். மாணவர்கள் பங்கேற்ற சிலம்பம், கபடி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.