districts

img

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், நவ.1 -  பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தும், பாலஸ்தீன மக்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுக்க, ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தலின்படி போரை நிறுத்த வேண்டும் என வலியு றுத்தியும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவை அளிக்காத ஒன்றிய மோடி அரசை கண்டித் தும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சா வூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கு.சந்துரு  ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார். கிளை நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர்.