districts

img

ஆளுநர் ரவியை கண்டித்து மாணவர் சங்கம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, செப். 8 - தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் தேர்வு குழுவை தன்னிச்சையாக செய்த ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்தும், தொ டர்ந்து இவ்வாறு செயல் படும் ஆளுநர் ஆர்.என்.ரவி  பதவி விலக வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தி னர் வெள்ளியன்று திருச்சி  பாரதிதாசன் பல்கலைக் கழக காஜாமலை வளாக  முன்பு கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநி லத் தலைவர் அரவிந்த்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன், மாந கர் மாவட்டத் தலைவர் சூர்யா, புதுக்கோட்டை மாவட் டச் செயலாளர் ஜனார்த் தனன், மாவட்டத் தலைவர் சந்தோஷ் ஆகியோர் பேசி னர்.  தஞ்சாவூர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன தேடு தல் குழுவை தன்னிச்சை யாக அறிவித்துள்ள ஆளுநர்  ஆர்.என்.ரவி தனது அறி விப்பை திரும்பப் பெற வலி யுறுத்தி, இந்திய மாணவர்  சங்கம் தலைமையில் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடை பெற்றது. சங்கத்தின் தஞ்சை  மாவட்ட தலைவர் அர்ஜுன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கு.சந்துரு போராட்டத்தை விளக்கி பேசினார்.