districts

img

துவாக்குடி சுங்க சாவடியை இழுத்து மூடும் போராட்டம் சிபிஎம் நடத்தியது

 திருச்சிராப்பள்ளி, டிச.29- திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்  சாலையில் விதிகளை மீறி சட்ட விரோதமாக துவாக்குடி முதல் பழைய பால்பண்ணை வரை சர் வீஸ்சாலை அமைக்காமல் சாலை அமைத்ததால் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்பும், 1000த்திற்கும் மேற் பட்டோர் சாலை விபத்தால் உடல் பாகங்களை இழந்து வீட்டில்  முடங்கி கிடப்பதை கண்டித்தும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அமைச்சர் மகேஸ்பொய்யா மொழி கொடுத்த சர்வீஸ் சாலை  அமைக்கப்படும் என்ற வாக்குறுதி யை நிறைவேற்ற வேண்டும், 2019-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் 6 மாதத்திற்குள் சர்வீஸ் சாலை  அமைக்க வேண்டும் என உத்தர விட்டதை உடனே அமல்படுத்த வேண்டும், அதுவரை சுங்கக்கட்ட ணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று துவாக்குடியில் உள்ள சுங்கசாவடியை இழுத்து மூடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். துவாக்குடி - பழையபால்பண்ணை சர்வீஸ்ரோடு மீட்பு கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாந கர் மாவட்டச் செயலாளர் ராஜா,  திருவெறும்பூர் தாலுகா செயலா ளர் மல்லிகா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரேணுகா, லெனின், மாதர் சங்க மாநகர் மாவட்டச் செய லாளர் சரஸ்வதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, கிச்சான், எலிசபெத்ராணி ஆகி யோர் விளக்கிப் பேசினர்.
ஒத்திவைப்பு
பின்னர் சுங்கசாவடியை முற்று கையிட்டு பூட்டு போடும் போராட்  டத்தில் ஈடுபட்ட முயன்றனர். அப்  போது அங்கு பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்த காவல்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், ஜனவரி 4 அன்று வட்  டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்ச னைக்கு தீர்வு காண்பது என உறுதி யளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.  இதுகுறித்து மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘‘திருச்சி பழைய  பால்பண்னை முதல் துவாக்குடி வரையிலான சுமார் 14 கி.மீ தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது, 4 வழிசுங்க கட்டண  சாலைக்கான விதிகளை மீறி சட்  டத்திற்கு புறம்பாக குடியிருப்புக் கள், தொழிற்சாலைகள், பள்ளி,  கல்லூரிகள் நிறைந்த பகுதியில்  2006-ஆம் ஆண்டு சர்வீஸ் சாலை  அமைக்காமல் தெருச்சாலைகள் இரண்டு புறமும் நூற்றுக்கணக் கான இடங்களில் தேசிய நெடுஞ்  சாலையை நேரடியாக இணை யும் ஆபத்தான முறையில் எல்லோ ரின் எதிர்ப்பையும் மீறி சில கட்டிட உரிமையாளர்கள் நலனுக்காக 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது.  

இதன் விளைவாக அரியமங்க லம் காட்டூர், கைலாஷ் நகர், திரு வரம்பூர், பெல், துவாக்குடி பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள் தினம் தினம் விபத்தில் சிக்கி  உயிர் பலியாவதும், ஆயிரக ணக்கானோர் நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டு வருதும் தொடர் கதை யாகி வருகிறது.  மேலும் சட்டமன்ற தேர்தலில்  ஆளும் திமுக அரசால் வழங்கப் பட்ட தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதே போல்  உடனடியாக 6 மாத காலத்திற்குள் சர்வீஸ் சாலை அமைத்து அப்பகுதி மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்ற மதுரை உயர் நீதி மன்ற உத்தரவும் தொடர்ந்து அமல்  படுத்த மறுக்கப்படுகிறது.  எனவே, தமிழக அரசு உடனடி யாக போர்க்கால அடிப்படையில் நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கிட வேண்டும், இந்த விச யத்தில் பிரச்சனைக்களுக்கு மூல காரணமான 4 வழி சுங்கச்சாலை விதிகள் மற்றும் சட்டத்திற்கு புறம்  பாக திருச்சி பழைய பால்பண்னை  முதல் துவக்குடி வரை சுமார் 14 கி.மீ தூரம் சர்வீஸ் சாலையே அமைக்காமல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்வதை ஏற்க இயலாது. எனவே 14. கி.மீக்கு சர்வீஸ் சாலை அமைத்து விட்டு சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும்’’ என்றார்.