திருச்சிராப்பள்ளி, மே 24 -
விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாட்டின் 7 முனைகளிலிருந்து 2100 கி.மீட்டர் நடைபயண பிரச்சாரம் மே 30 ஆம் தேதி திருச்சியில் சங்கமித்து தொழிலாளர் ஊர்வலம்-பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நடைபயணத்தில் முன்வைக் கப்படுகிற 14 அம்சக் கோரிக்கை களை விளக்கி திருச்சி மாநகரில் 50 மையங்களில் தெருமுனை கூட்டங் கள் நடத்தி, துண்டு பிரசுரம் விநியோ கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தென்னூர் உறையூர் பகுதிகளில் நான்கு இடங்களில் தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
பிரச்சார கூட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் செயலாளர் எஸ்.கே. செல்வராஜ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி பழனி யாண்டி, நடராஜன், இருதயராஜ் மற்றும் மெடிக்கல்ஸ் சங்க நிர்வாகி செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
இதேபோன்று விரைவு போக்கு வரத்து கழக சிஐடியு திருச்சி கிளையின் சார்பில் கல்லுக்குழி, டிவிஎஸ் டோல்கேட், சுப்ரமணிய புரம், கடைவீதி, எம்ஜிஆர் சிலை மற்றும் எஸ்சிடிசி டெப்போ முன்பாக என ஐந்து இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
பிரச்சா ரக் கூட்டத்திற்கு ஜெயராமன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ரெங்கராஜன் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.