மயிலாடுதுறை, நவ.22 - புயல் எச்சரிக்கை காரணமாக மயி லாடுதுறை மாவட்டத்திலுள்ள மீன வர்கள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டம் முழுவதுமுள்ள கடலோர கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள், விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. வங்கக் கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள 28 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வியாழனன்று இரவு முதல் மறு அறி விப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருக்கும் மீனவர்களுக்கும் தகவல் தெரிவித்து கரைக்கு திரும்பவும் மாவட்ட மீன் வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை, சந்திரபாடி, தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட 28 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 400 விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் தரங்கம்பாடி பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.