தஞ்சாவூர், டிச.22 - தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2022 - 2023-ஆம் ஆண்டுக்கான அரவை பருவ தொடக்க விழா நடந்தது. தஞ்சை - புதுக்கோட்டை வழித்தடத்தில் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை தொடங் கப்பட்டது. தமிழகத்தில் அரசுக்கு சொந்த மான 2 கரும்பு ஆலைகளில் இதுவும் ஒன்று. இந்த சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதி யில் இயல்பான கரும்பு சாகுபடி 13 ஆயிரம் ஏக்கராக இருந்தது. தற்போது 6 ஆயிரம் ஏக்க ராக குறைந்துள்ளது. இருப்பினும் கரும்பு விவசாயிகள் இந்த ஆலையை நம்பி பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் கரும்பு சாகுபடியை தொடர்ந்து செய்து வருகின்ற னர். இந்நிலையில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான அரவை பருவம் தொடக்க விழா நடந்தது. தஞ்சாவூர் எம்.எல்.ஏ., டி.கே.ஜி. நீலமேகம் அரவை பணியை தொடங்கி வைத் தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆலை தலைமை நிர்வாகியுமான வசந்தராஜன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்கள் ராமசாமி, பாஸ்கரன், செயலா ளர் கோவிந்தராஜ், பொருளாளர் அர்ஜுனன், துணைப் பொருளாளர் அண்ணாத்துரை, பொதுச் செயலாளர் திருப்பதி வாண்டையார், வேளாண் உதவி இயக்குனர் அய்யம்பெரு மாள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.