districts

img

ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு தொடக்க விழா

புதுக்கோட்டை, ஜூன் 12 -

     புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியில் புதிதாகச் சேர்ந்தவர்களை, ஆசிரியர்கள்-மாணவர்கள் ரோஜா மலர் கொடுத்து வரவேற்றனர். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, மேலாண்மை இயக்குநர் நிவேதிதாமூர்த்தி, பேராசிரியர் கருப்பையா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் சிறப்புரையாற்றினார்.

   முன்னதாக ஆசிரியர் கனியன் செல்வராஜ் வரவேற்க, அபிராமசுந்தரி நன்றி கூறினார். பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.