நாகப்பட்டினம், ஆக.24-
வேதாரண்யம் கட லோரப் பாதுகாப்புக் குழும காவல்துறையினர் ஏற்க னவே 30 இலங்கை கடற் கொள்ளையர்கள் மீது வழக் குப்பதிவு செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட் டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத் துறை, வெள்ளப்பள்ளம் பகுதி யைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 21, 22 -ஆம் தேதிகளில் கோடியக்கரைக்குத் தென் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற் கொள்ளையர்கள் தமிழ்நாடு மீனவர்களை வழிமறித்து கத்தி, இரும்பு கம்பியால் தாக்கி மீன்பிடி வலைகள், மீன்கள், மற்றும் மீன்பிடிப் பொருட்களை கொள்ளை யடித்துக் கொண்டு மீனவர் களை விரட்டி அடித்து சென்று விட்டனர்.
கடற்கொள்ளையர்கள் 21-ஆம் தேதி நடத்திய தாக்கு தலில் காயமடைந்தவர்கள் வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் வைத்தியநாத சுவாமி, செல்வராஜ், ராம ராஜ் என்பது தெரியவந்தது. மற்றொரு தாக்குதலில் 15 மீனவர்கள் காயமடைந்துள் ளனர்.
தாக்குதலில் காயம டைந்த ஆறுகாட்டுதுறை, வெள்ளபள்ளம் மீனவர்கள் 15 பேர் நாகப்பட்டினம் மற் றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில் இந்தத் தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறையினர் 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத 46 இலங்கைக் கடற் கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கைக் கடற் கொள்ளையர்கள் மீது இந்தி யத் தண்டனைச் சட்டப் பிரிவு 397 (கொள்ளை அல்லது கொள்ளை, மரணம் அல் லது கொடுங் காயத்தை ஏற் படுத்துதல் ஆகிய பிரிவு களின் கீழ்) கீழ் 30 “இலங்கை பிரஜைகள்” மீது நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கட லோர பாதுகாப்பு குழுவின் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் மேலும் 16 கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. மொத்தம் 46 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.