districts

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி முகாம்

தஞ்சாவூர், ஏப்.27-  

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சை மாவட்டம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் தஞ்சை  அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மே 2-ஆம் தேதி  முதல் 16-ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதி யில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்படும். மேலும், பயிற்சி முகாமில் கலந்து கொள் ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

   முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்  களை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் அலு வலக வேலை நேரங்களில் வெள்ளிக்கிழமை) முதல்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியா கவோ அல்லது 04362-235633 என்ற தொலைபேசி வாயி லாகவோ பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.  

  தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்’’ எனத் தெரி வித்துள்ளார்.