districts

டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்

கும்பகோணம், ஜூலை 1-

      தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம், மன அழுத்த மேலாண்மை பயிற்சி ஆகியவை தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலு வலகத்தில் நடைபெற்றன.

     நிகழ்ச்சிகளை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தலைமையேற்று தொடங்கி  வைத்தார். பொது மேலாளர்கள் கே.முகமதுநாசர், கே.இளங் கோவன், முதுநிலை துணை மேலாளர் கே.டி.கோவிந்தரா ஜன், துணை மேலாளர்கள் ஏ.தமிழ்செல்வன், எச்.ராஜேந்தி ரன், எஸ்.செந்தில்குமார், பி.கணேசன், பீ.ஸ்ரீதர், உதவி மேலா ளர் என்.ராஜசேகர் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.