districts

img

காமலாபுரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம், காமலாபுரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா புதனன்று நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின் சார்பில் 901 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கினார். நிகழ்வில், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், தொட்டியம் வருவாய் வட்டாச்சியர் ஞானாமிர்தம், காமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.