districts

img

கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்

திருச்சிராப்பள்ளி/மயிலாடுதுறை, செப்.26 - திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளு படி விற்பனையை திங்களன்று மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார் தொடங்கி வைத்துப் பார்வை யிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் களிடம் கூறுகையில், “கோ-ஆப்டெக்ஸ் நிறு வனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை யின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகிறது.  இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோராகாட்டன் சேலைகள், கூறைநாடு புடவை கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவா ளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளைசெட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன. திருச்சி பொதிகை விற்பனை நிலையத் தில் 2021 தீபாவளிக்கு ரூ.143.75 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த தீபாவளிக்கு ரூ.300 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறு வனம், “கனவு நனவு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத் தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத் தினை பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர் கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல  மேலாளர் அம்சவேணி, மேலாளர் அன்பழகன், திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சங்கர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சி யர் இரா.லலிதா பணம் செலுத்தி கைத்தறி புட வையை பெற்றுக் கொண்டு தொடங்கி வைத் தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.65 லட்சத் திற்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு தீபா வளிக்கு, கடலூர் மண்டலத்திற்கு ரூ.1400 லட்சம்  விற்பனை குறியீடாகவும், அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.100 லட்சமும், சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூ.50 லட்சமும் விற் பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என  தெரிவித்தார். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட் சியர் வ.யுரேகா, கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலா ளர் தா.ரமணி, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் எஸ்.குமார் கலந்து கொண்டனர்.

;