கும்பகோணம், மே 14-
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் மேலவிசலூர் கிராமம் காந்திநகரில் வசிப்பவர் மோகன் தாஸ் (60) இவரது மகன் இராமச்சந்திரன் (20) இவருக்குத் திருமணமாகி விட்டது. இதையடுத்து இராமச்சந்திரன் தனக்குத் தனி வீடு வேண்டுமெனக் கேட்டு தந்தையுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில், சனிக்கிழமை மதிய உணவின் போது தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் தனது தந்தை மோகன்தாசை கத்தியால் குத்திவிட்டு இராமச்சந்தி ரன் ஓடிவிட்டார். படுகாயமடைந்த மோகன்தாஸ் தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாச்சியார்கோவில் காவல்துறை யினர் இராமச்சந்திரனைத் தேடி வருகின்றனர்.