மயிலாடுதுறை, ஜூன் 16-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக் களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடி கடைவீதியில் சமூக நல அறக்கட்டளை சார்பில் நீர் மோர் மற்றும் குளிர் பானம் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி ஹாஜி. இ.எம்.எம்.நஜீர் அஹமது தலைமையில் நடைபெற்றது.
திருக்களாச்சேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அஜீஸ் சமூக நல செயற்பாட்டாளரும், அறக்கட்டளை அறங்காவலருமான ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் எம். மாலிக் நிகழ்வை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறக் கட்டளை செயலாளர் மணிகண்டன், எம்.ஜாகீர் உசேன் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.