மயிலாடுதுறை, ஏப்.12- மயிலாடுதுறை மாவட்டம் இலுப்பூர் சங்கரன்பந்தலில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் எம்.விஜேந்தி ரன் (எ) சாம்சன்பால் - எஸ்.ஜெயலெட்சுமி (எ) பிரின்ஸில்லா ஆகியோரின் திரும ணத்திற்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற வாலி பர் சங்க நிர்வாகிகளிடம் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து தம் பதிகள் இருவரும் ஆர்வமுடன் கையெ ழுத்திட்டனர். நிகழ்வின்போது மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழகள், மாவட்டத் தலைவர் ஐயப் பன், ஒன்றியச் செயலாளர் பவுல் சத்திய ராஜ், ஒன்றியத் தலைவர் கார்த்திகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.