மயிலாடுதுறை, டிச.28- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், தலைச்சங்காடு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த தலை மையாசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தலைச்சங்காடு அருகிலுள்ள கரைமேடு பகுதியில் டி.இ.எல்.சி நடுநிலைப்பள்ளி யில் தலைமையாசிரியராக பணியாற்றி வரு பவர் பொறையார், யாதவர் தெருவை சேர்ந்த சாமுவேல் செல்லத்துரை. இவர் இப்பள்ளியின் தலைமையாசிரியராகவும், தாளாளராகவும் பணியாற்றுகிறார். அந்த பள்ளியில் தலைச்சங்காடு, கரை மேடு, மேலப்பெரும்பள்ளம் பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் சூழலில், தலைமையாசிரியர் சாமுவேல் செல்லத்துரை, மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி களின் பெற்றோர்கள் அளித்த புகாரை யடுத்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகளிடம் அத்துமீறி கொடூரமாக நடந்துகொண்ட தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிந்து கைது செய்வ தோடு, அவரை பணிநீக்கம் செய்ய வேண் டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மயி லாடுதுறை மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ வலியுறுத்தியுள்ளார்.