பேராவூரணி, ஜன.20- சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், பூக்கொல்லையில் உள்ள ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணி க்கம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி (வ.ஊ), சடையப்பன் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அலுவலக மேலாளர் நாகேந்திரன் நன்றி கூறினார். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு ஒன்றியக்குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய அலுவலர்கள் பதில் அளித்துப் பேசினர். கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.