தஞ்சாவூர், செப்.24 - மரக்காவலசை கிராமத்தில், சுடு காடு அருகே உள்ள மின்மாற்றியில் இருந்து, காப்பர் காயல் திருடப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மரக்கா வலசை கிராமத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் காரங் குடா செல்லும் வழியில், இடதுபுறத்தில் சுடுகாடு உள்ளது. இதனருகே விளைநிலங்கள், தென் னந்தோப்புகள் உள்ளன. இப்பகுதி யில், விவசாயிகளின் மின் மோட்டார் களுக்கு பயன்படும் வகையில் தமிழ் நாடு மின்சார வாரியம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை அதி காலை இப்பகுதியில் மின்சாரம் தடை பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியி னர் அங்கு சென்று பார்த்தபோது, மின்மாற்றி உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் மின்வாரி யத்திற்கு தகவல் அளித்தனர். தகவ லறிந்து வந்த நாடியம் உதவி மின் பொறி யாளர் சிவசங்கர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, புதி தாக அமைக்கப்பட்ட மின்மாற்றி உடைக் கப்பட்டு, அதிலிருந்து காப்பர் காயில் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து நாடியம் உதவி மின் பொறியாளர் சிவசங்கர் சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருட்டுப் போன காப்பர் காய லின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என மின்வாரிய நிர்வாகத்தினர் தெரிவித்துள் ளனர். தொடர் திருட்டு பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரம் பகுதியில் கடந்த 2, 3 மாதங் களாகவே விளை நிலங்களில், தென்னந் தோப்புகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் மின் மோட் டார்
சேதப்படுத்தப்பட்டு, அதில் உள்ள காப்பர் வயர்கள் தொடர்ச்சியாக திரு டப்பட்டு வருகின்றன. கடந்த 15 தினங்களுக்கு முன்பு கழனிவாசல் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து காப்பர் வயர்கள் திருடப்பட்டுள் ளன. இதேபோல் செங்கமங்கலம் பகுதி யிலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காப்பர் காயல் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத் தில் புகார் அளித்தும், கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படு கிறது. போதிய காவலர்கள் இல்லாத தால் இதில் கவனம் செலுத்த முடிய வில்லை என காவல்துறையினர் தெரி விக்கின்றனர். தொடர்ச்சியாக தனியார் நிலங் களில் வைக்கப்பட்டிருந்த மோட்டார்க ளில் இருந்து காப்பர் காயில் திருடப் பட்ட நிலையில், தற்போது அரசின் மின் வாரியத்திற்கு சொந்தமான மின் மாற்றி உடைக்கப்பட்டு, அதிலிருந்து காப்பர் கம்பி திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், “சில ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடுவதற்காக, பல ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் மற்றும் மின் இணைப்புகளை திருடர்கள் சேதப் படுத்திச் செல்கின்றனர். இதனால் விவ சாயிகள் பெரும் இழப்பை சந்திக் கிறோம். எனவே உடனடியாக தனிப் படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.