விழிப்புணர்வு பிரச்சாரம்
பாபநாசம், பிப்.15- திருவையாறு வட்டாரம் வைத்தியநாதன் பேட்டை, பனையூர், ஆச்சனூர், வடுககுடி, மருவூர், சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் அட்மா திட்டம் சார்பில் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி மேற்கொள்ள வேண்டி, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பனையூரில் நடைபெற்ற நிகழ்வை திருவையாறு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சுஜாதா துவக்கி வைத்தார்.
பள்ளி ஆண்டு விழா
திருவாரூர், பிப்.14- குடவாசல் ஸ்ரீ மகாதேவா குருஜி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 15-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. குடவாசல் மகாலட்சுமி மாணிக்கம் பள்ளி தாளாளர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சி.மாயகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திரைப் பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் கலந்து கொண்டார். முன்னதாக பள்ளி தாளாளர் எம்.டி.பாணி வரவேற்றார். கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி தாளாளர் எம்.டி.பாணி, துணைத் தாளாளர் எம்.டி.ஷீத்தல் பரிசுகள், சான்றிதழ் களை வழங்கினர். நிகழ்ச்சியில், திருவாரூர் வேலுடை யார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எஸ்.எஸ்.தியாக பாரி, மரு.சியாம் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விதைகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை
திருச்சிராப்பள்ளி, பிப்.14- திருச்சி மாவட்டத்தில் நீர் பாசன வசதி உள்ள இடங்க ளில் வரும் கோடை பருவத்தில் நெல், உளுந்து, எள் போன்ற பயிர்கள் விவசாயிகளால் பயிரிடப்படுகின்றன. இதில், தரமான விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்க செய்வதே விதை ஆய்வுதுறையின் முக்கிய நோக்கமாகும். மேலும், விதை விற்பனையாளர்கள் விதை களை விற்பனை செய்யும் போது அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விவசாயி கள் விதைகளை வாங்கும் போது விற்பனை பட்டியல் கேட்டு பெற வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால், விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968, விதை கட்டுப்பாடு ஆணை 1983-இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
பேராவூரணி கடல் பகுதியில் மீன்களுடன் வலைகள் தொடர் திருட்டு:
கடலோரக் காவல்படை நடவடிக்கை எடுக்க சிஐடியு கோரிக்கை
தஞ்சாவூர், பிப்.14- தஞ்சை மாவட்டம் பேராவூரணி கடல் பகுதியில் மீனவர்களின் மீன் வலை தொடர்ந்து திருடப்படுவ தால் மீனவர்கள் கவலை அடைந் துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட எல்லை யான தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி, புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கட்டுமாவடி வரை 32-க்கும் மேற்பட்ட மீனவக் கிரா மங்கள் உள்ளன. இதில், செந்தலைவயல் பகுதி மீனவர்கள், கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வலைவீசி வருவது வழக்கம். அதில், பிடிபட்டுள்ள மீன்களுடன் குறிப்பிட்ட சில மீன வர்கள் தொடர்ந்து வலைகளை திருடி செல்வதாக புகார் அளிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, செந்தலைவயல் ஊராட்சியைச் சேர்ந்த சகாபுதீன், சிஐடியு நிர்வாகி ஆர்.எஸ்.வேலுச் சாமி, சிஐடியு மீன்பிடித் தொழிலா ளர்கள் சங்க நிர்வாகிகள் நாகேந்தி ரன், நவாஸ்கான், சாகுல்கமீது, ரசீத்கான் ஆகியோருடன் சென்று சேதுபாவாசத்திரம் கடலோர காவல்துறை, காவல் ஆய்வாள ரிடம் இதுகுறித்து புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பிப்ரவரி 12-ஆம் தேதி செந்தலைவயல் துறை முகத்துக்கு, நேரெதிராக கடலுக் குள் வலையை விரித்து விட்டு வந்து விட்டேன். பிறகு வலையை எடுக்கச் சென்றபோது வலையைக் காண வில்லை. அருகில் உள்ள பகுதி யைச் சேர்ந்த ஒரு நபர் வலைத் திருட்டில் ஈடுபட்டவர் என்பதால், மற்ற மீனவர்களுடன் சென்று, அவ ரது படகில் பார்த்த போது என்னு டைய திருட்டுப் போன வலை இருந்தது. அந்த நபரிடமிருந்து என்னுடைய வலையை மீட்டுத் தர வேண்டும்.
அவர் மீண்டும் வலைத் திருட்டில் ஈடுபடாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள் ளது. கிராமங்கள் இடையே பிரச்சனை எழும் இதுகுறித்து சிஐடியு மீன்பிடித் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘மீனவர்களின் வலைகள் ஒவ்வொன்றும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை மதிப்புள்ளது. சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10-க்கும் மேற்பட்ட வலைகள் திருட்டுப் போய் உள்ளன. மீனவர்களில் சிலர் இந்தத் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மீன் வலையையும் இழப்பதுடன் அதில் பிடிபட்டுள்ள மீன்களையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் மீனவ கிரா மங்கள் இடையே தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே, கடலோர காவல் படை யினர் இது போன்ற குற்றச்செய லில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் கடலோரக் காவல் படை உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் சிஐடியு மீன்பிடி தொழி லாளர் சங்கம் சார்பில், கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பிப்.16 பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி - விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பட்டுக்கோட்டை, பிப்.14- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில், பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்படி, காலை 11.30 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும், பிற்பகல் 3:30 மணிக்கு விவசாயிகளுக்கும், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பயிர்களை காப்பீடு செய்ய ஆட்சியர் வேண்டுகோள்
மயிலாடுதுறை, பிப்.14- மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 2022-2023-ஆம் ஆண்டு குளிர்கால (ராபி) பருவ நெல் தரிசில் உளுந்து, நெல் தரிசில் பச்சைப்பயறு ஆகிய பயிர்களை 2023 பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 - 2023ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர்காப்பீட்டுத் திட்டம் இந்திய வேளாண் காப்பீட்டுக் கழக நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு, அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணம் செலுத்தி நெல் தரிசில் உளுந்து, நெல் தரிசில் பச்சைப்பயறு ஆகிய பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு
பெரம்பலூர், பிப்.14- பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள எஸ்எஸ்சி எம்டிஎஸ் (SSC MTS) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 7 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 17 ஆகும். 11,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவி யர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் அனைவரும் இத்தேர்விற்கு தவறாது (https://ssc.nic.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்பட்டு வரும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பயன்பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலைபேசி வாயிலாக 9499055913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.
சிறுவன் கிணற்றில் விழுந்து பலி
தேனி, பிப்.14- தேனியில் புறா பிடிப் பதற்கு சென்ற எட்டாம் ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (13) என்ற மாணவன் பங்கஜம் ஹவுஸ் தெருவில் உள்ள கிணற்றில் புறா பிடிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது நிலை தடுமாறி 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாண வனின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சரியான எடையில் பொருட்கள் வழங்கிட நியாய விலை கடை பணியாளர்கள் கோரிக்கை
பொது விநியோகத் திட்ட துணை பதிவாளரிடம் சிஐடியு மனு
குழித்துறை, பிப். 14 நியாய விலை கடை பணியாளர் பிரச்சனைகள் குறித்து பொது விநியோ கத் திட்ட துணை பதிவாளர் நாகர்கோ வில் அவர்களிடம் குமரி மாவட்ட கூட்டு றவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது கிட்டங்கிகளிலி ருந்து குறைவான அளவில் கிழிந்த மூடைகளில் பொ ருட்கள் வழங்குவதால் ஏற்படும் இருப்பு குறைவை காரணம் காட்டி பறக்கும்படை உள்ளிட்ட அதிகாரிகள் அபரிமிதமாக அபராதம் விதிப்பதும், வாங்கும் குறைந்த சம்பளத்தை அபராதமாக கட்ட வேண்டிய சூழல் உள்ளதால் அபராதம் விதிப்பதை கைவிட்டு தவறு தொடங்கும் கிட்டங்கி யை ஆய்வு செய்து சரியான எடை யில் பொருட்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்குளம் விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடை பணியாளர்கள் தலைமை இடத்திலிருந்து கடைகளுக்கு செல்லவும் விற்பனை தொகையை தினந்தோறும் தலைமையகத்தில் செலுத்தவும் வழங்கி வந்த நிலை யான பயணப்படி 2012- 13 முதல் தணிக்கையில் மறுக்கப்பட்டதை ரத்து செய்து தொடர்ந்து பயணப்படி வழங்கிட வேண்டும். நியாய விலை கடை பணியாளர்க ளுக்கு பதிவாளர் சுற்றறிக்கை படி சம்பள பட்டியல் வழங்கிடவும் சிறப்பு திட்ட செயலாக்கத்திற்கான குடும்ப அட்டைஒன்றிற்கு 50 பைசா எனும் ஊக்க தொகைஇன்னும் வழங்கப்ப டாமல் உள்ள பணியாளர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்து உடன் வழங்கிட வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர் நியமித்திடவும், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திடவும் ஊட்டுவாழ் மடம் தொடக்க கூட்டுறவு சங்கத்திலிருந்து விற்பனையாளராக பணியாற்றி 31. 5. 2022ல் பணி ஓய்வு பெற்ற பிஎஸ் நாதன் என்பவருக்கு குறைவாக வழங்கப்பட்டுள்ள ஓய்வூ திய பலன்களை முறையாக வழங்கிட வும் பி ஓ எஸ் எந்திரத்தில் இரட்டை பதிவு முறையை கைவிடவும், விடு பட்டுப் போன மூன்று சதவீதம் அக விலைப்படியை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் துணைப்பதிவாளரிடம் மனு வழங்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சௌந்தர், செயலாளர் பத்மகுமார் மற்றும் நிர்வாகிகள் ராபின்சன், ரவிச்சந்திரன், ஷைனு ,சதீஷ் தெய்வ நாயகம் ,நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை முகாம்
அரியலூர், பிப்.14- ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் தேவைப்படுவோரை கண்டறியும், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் தட்சணாமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுகை - தஞ்சை புதிய ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
ரயில்வே அதிகாரிகளுக்கு எம்.சின்னதுரை எம்எம்ஏ கடிதம்
புதுக்கோட்டை, பிப்.14- புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூற்றாண்டுக் கனவுத் திட்டமான புதுக்கோட்டை- தஞ்சாவூர் இடையே புதிய ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய ரயில்வே துறை நிறைவேற்றித் தர வேண்டும் என கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான கடிதத்தை தெற்கு ரயில்வே பொதுமேலாளர், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பி வைத்துள்ளார். மேலும், இந்தக் கடிதத்தின் நகல்களை, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகி யோருக்கும் அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: புதுக்கோட்டை- தஞ்சாவூர் ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு தனியே ஒரு ரயில் நிலையம் கிடைக்கும். அதன் மூலம் இந்த வழியாகச் செல்லும் ரயில்களில் எளி தில் பயணித்து புதுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தினமும் தஞ்சாவூருக்கும், புதுக்கோட்டைக்கும் வேலைக்கு வந்து செல்லும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள். மேலும், இந்தப் பகுதியிலுள்ள விவசாய விளைபொருட்களை வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் வசதியும் கிடைக்கும். இணைப்பு ரயில்கள் மூலம் வெளியூர்களுக்கும் சென்று வரு வதற்கு கந்தர்வகோட்டை தொகுதி மக்கள் பயன்பெறுவார்கள். எனவே, புதுக்கோட்டை- தஞ்சை ரயில்பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட ஒன்றிய ரயில்வே துறைக்கு உரிய முன்மொழிகளை அனுப்பி, நிதி பெற்று, விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.