மயிலாடுதுறை, செப்.10 - மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழுவின் புதிய அலுவலக கட்டடமான தோழர் கோ.பாரதிமோகன் நினைவகத்தை செப்.13 அன்று அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகள் மிக தீவிரமாக செய்யப்பட்டு வரும் சூழலில், அலுவலக திறப்பு விழாவிற்கான வலைதள முகப்பு இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி கட்சியின் புதிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இலச்சினையை மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டனர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.மேகநாதன், அமுல்காஸ்ட்ரோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.