districts

img

சேந்தங்குடி தென்பாதி சாலை சீரமைக்கப்படுமா?

மயிலாடுதுறை, டிச.15- மயிலாடுதுறையை யொட்டியுள்ள வள்ளலா கரம் ஊராட்சியில் திரும்பும் திசையெல்லாம் மரண பள்  ளங்களுடன் உள்ள சேந் தங்குடி தென்பாதித்தெரு சாலையை சீரமைக்க வேண்  டுமென அப்பகுதி மக்கள்  தொடர்ந்து பலமுறை கோரி க்கை வைத்தும் இதுவரை யிலும் எந்தவித நடவடிக்கை யும் இல்லாததால்  கடும் அவ தியடைந்து வருகின்றனர்.                       மயிலாடுதுறை அருகில் உள்ள வள்ளலாகரம் ஊராட் சிக்குட்பட்ட சேந்தங்குடி கிராமத்திலிருந்து சீர்காழி மெயின்ரோடு, ஊராட்சி மன்ற அலுவலகம், கிரீன்  கார்டன், கூட்டுறவு நகர்,  வலம்புரி நகர், மணக்குடி, பூம்புகார் சாலை உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட பகுதி களை இணைக்கக் கூடிய குறுக்குவழி சாலையாக உள்ள தென்பாதி சாலை படு மோசமாக சேதமடைந்துள் ளது.  இச்சாலையின் வழியாக அன்றாடம் பணிக்கு செல்ப வர்கள், பள்ளி, கல்லூரி  மாணவர்கள், வெளியூர்களி லிருந்து இச்சாலை வழி யாக செல்பவர்கள் கடும் சிர மத்தோடு கடந்து செல்கின்ற னர். மழைக்காலங்களில் பள்ளங்களிலெல்லாம் நீர் நிரம்பி விடுவதால் சாலை எதுவென்று தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்வதும் வாடிக்கையாகி விட்டது.  இச்சாலையை தார்ச் சாலையாக அமைத்துத்தர வேண்டுமென பலமுறை  அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கோரிக்கைகளை மக்  கள் பிரதிநிதிகள், அரசு அதி காரிகளிடம் மனுக்கள் வாயி லாகவும், நேரடியாகவும் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மற்ற பகுதிகளில் எல்  லாம் புதிது புதிதாக சாலை களை அமைக்கும் அரசு  நிர்வாகம் 100 ஆண்டுகளுக் கும் மேலாக இப்பகுதியில் வசிக்கும் மக்களை கண் டுக்கொள்வதில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் தற்போது பெய்து வரும் மழையால் சேறும்,  சகதியுமாக மரண பள்ளங்க ளுடன் காணப்படும் தென் வாதி சாலையை சீரமைக்க இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று அப் பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.