districts

img

திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் வானியல் தொடர்பான கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 1 -

     தமிழ்நாடு அஸ்ட்ரோ சயின்ஸ் சிம்போசியம் சார்பில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கருத்தரங்கம் கடந்த ஜூன் 29 அன்று தொடங்கி 3  நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் கருத்தரங்கின் முதல் அமர்வில் ‘இந்திய விண்வெளி ஓடிசி’ என்ற தலைப்பில் இஸ்ரோ முதுபெரும் விஞ்ஞானி பேராசிரியர் இளங் கோவன் பேசினார்.

     இரண்டாம் அமர்வில் கோவை  அஸ்ட்ரோ கிளப் செயலாளர் சாய்லெட்சுமி பேசி னார். இரண்டாம் நாள் முதல் அமர்வை நிலா மனிதர்  இஸ்ரோ முன்னாள் இயக்குநர் முனைவர் மயில் சாமி அண்ணாதுரை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் நிறுவனர் ஜெ.மனோகர், பிஷப்  ஹீபர் கல்லூரி முதல்வர் முனைவர் பால் தயா பரன், அறிவியல் புல முதன்மையர் முனைவர் வய லெட் தயாபரன், அறிவியல் பலகை மாநில ஒருங் கிணைப்பாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் பேசினர்.

     ‘பிளாக்ஹோல்ஸ்’ என்ற தலைப்பில் விஞ்ஞானி சதீஷ்குமார் சரவணன் (சர்வதேச இயற் பியல் மையம் பிரேசில்) பேசினார். சோலார்  அப்சர்வேட்டரி மியூசியம் குறித்து கொடைக்கா னல் சூரியக் கண்காணிப்பக இருப்பிட விஞ்ஞானி  எபனேசர் செல்லசாமி பேசினார்.

    பிரபஞ்சத்தைப் பற்றிய 10 பெரிய கேள்விகள் குறித்து வானியல்  ஆய்வாளர் பிரியாஹசன், மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி ஆகியோர் பேசினர். இரண்டாவது அமர்வில் ‘ஆஸ்ட்ரோ இயற்பி யல் கல்வி’ என்ற தலைப்பில் திருச்சி ஆஸ்ட்ரோ  கிளப் தலைவர் பாலகிருஷ்ணன் பேசினார்.

    கருத்த ரங்கின் நிறைவு நாளான ஜூலை 1 அன்று நடந்த முதல் அமர்வில் ‘வானியல் பாரம்பரியம்’ என்ற  தலைப்பில் விஞ்ஞான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி (புதுதில்லி) த.வி.வெங்கடேஸ்வரன், சேலம் ஆஸ்ட்ரோ கிளப் செயலாளர் மேகலா ஆகி யோர் பேசினர்.

    ‘வானியல் கருவிகள் மற்றும் பொம்மைகள்’ என்ற தலைப்பில் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ்வரன், தொலைநோக்கி மற்றும் ஆஸ்ட்ரோ கருவிகள் என்ற தலைப்பில் கோவை  ஆஸ்ட்ரோ கிளப் ஆலோசகர் சக்திவேல், கோவை  ஆஸ்ட்ரோ கிளப் தலைவர் ரமேஷ், பிஷப்ஹீபர் கல்லூரி இணை முதன்மையர் முனைவர் ஜோஸ்பின் பிரபா ஆகியோர் பேசினர்.  

    இந்த மூன்று நாள் நிகழ்வில் புத்தகக் கண் காட்சிகள், வானியற்பியல் கண்காட்சிகள், இரவு  வான் நோக்கல் நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள்,  கோளரங்க காட்சிகள் இடம்பெற்றன. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட  வானியல் ஆர்வலர்கள் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.