districts

img

அறிவியல் மாநாட்டில் 23 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு

திருவாரூர், அக்.31 - தேசிய குழந்தைகள் அறிவியல் திருவா ரூர் மாவட்ட 31-வது மாநாடு நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டம்  ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் பள்ளியில் திருவாரூர் மாவட்ட  அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் லலிதா ராமமூர்த்தி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் முத்துராஜ் வரவேற்றார். திருவா ரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ மற்றும் துளிர்  இல்லம் சார்ந்த குழந்தை விஞ்ஞானிகள் முது நிலை, இளநிலை பிரிவுகளில் 323 அறிவி யல் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.  இவற்றை கல்லூரி பேராசிரியர்கள், முது கலை ஆசிரியர்கள் உட்பட 30 பேர் கொண்ட  குழுவினர் மதிப்பீடு செய்தனர். அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் பா. தண்டபாணி தலைமையில், 23 ஆய்வுக் கட்டு ரைகள் தேர்வு செய்யப்பட்டன. இவை புதுக்கோட்டையில் நடைபெறும் மண்டல மாநாட்டில் கலந்து கொள்கின்றன.   மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சியாக புது தில்லி விஞ்ஞான பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று,  “அறிவியல் மனப்பான்மை” என்ற தலைப் பில் உரையாற்றினார்.  பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில்  பள்ளி செயலாளர் எல்.ஆர்.சந்தோஷ்,  அறிவியல் இயக்க மாநில செயலாளர்கள்  எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், எஸ்.டி.பால கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி, மாவட்டப் பொருளாளர் மு.சாந்த குமாரி, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் வி.விஜயன்  மற்றும் வானவில் மன்ற தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் பி.சங்கரலிங்கம் நன்றி கூறினார்.