மயிலாடுதுறை, மார்ச் 13- தேசிய அளவிலான கராத்தே நடுவர் தேர்வு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 100 க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சியாளர்கள் கலந்து கொண்ட இத்தேர்வில் மயிலாடுதுறை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளர் சென்சாய் கராத்தே கதிரவன் வெற்றி பெற்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவரது மாணவி அருண்பிரியா அண்ணா பல்கலைக்கழக கராத்தே அணியில் தேர்வுபெற்று அண்மையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே போட்டியில் பங்குபெற்றார். இந்நிலையில், தேசிய நடுவர் தேர்வில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளர் சென்சாய், கராத்தே கதிரவன் மற்றும் அவரது மாணவிகள் அருண்பிரியா, ஸ்வேதா, தீபா, பவித்ரா ஆகியோரையும் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. நிஷா, காவல் ஆய்வாளர் செல்வம், உதவி ஆய்வாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் பாராட்டினர்.