districts

கூடுதல் விலைக்கு விதை நெல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

தஞ்சாவூர், ஜூன் 17-  

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் குறுவை பருவத் தில் தரமான நெல் விதைகள் விற்பனை குறித்து, சிறப்பு விதை ஆய்வு  குழுவினர் வெள்ளியன்று அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள்  மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.

     மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் நெல் சாகுபடி பணி களுக்கு விவசாயிகள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். விவசாயி களின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதை களின் பங்கு முக்கியமானது. தரமான விதைகள், சரியான விலையில்  விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்க கச்சான்று துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.  

     கடந்த வாரம் முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில், விதை ஆய்வு துணை  இயக்குநர் முனைவர் விநாயகமூர்த்தி தலைமையில் குறுவை சிறப்பு  விதை ஆய்வு குழு அமைக்கப்பட்டு ஒரத்தநாடு, தஞ்சாவூர், பூதலூர்,  திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட இடங் களில் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார்  விதை விற்பனை நிலையங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

    தொடர்ந்து, விதை ஆய்வு குழுவினர் வெள்ளியன்று பட்டுக் கோட்டை பகுதிக்குட்பட்ட இடங்களில் உள்ள அரசு வேளாண்மை விரி வாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தனியார் விதை விற்பனை யாளர்கள் விதைச்சட்ட விதிகளின்படி குறுவை பருவத்தில், குறுகிய கால நெல் விதைகளை மட்டுமே விற்பனை மேற்கொள்ள அறிவுரைகள்  வழங்கப்பட்டது.  அரசின் விதை உரிமங்கள் பெற்று, சான்று பெற்ற  மற்றும் சான்று அட்டை பொருத்தப்பட்ட விதைகளை மட்டுமே விவசாயி களுக்கு விற்பனை செய்திடவும் எச்சரிக்கை விடப்பட்டது. ஆய்வின் போது, நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை மேற்கொள்ளவும், கூடுதல் விலையில் விவசாயிகளுக்கு விதை நெல் விற்பனை செய்யும்  விற்பனையாளர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.