தஞ்சாவூர், ஜூன் 7-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா ஆய்வு மேற் கொண்டார். வருவாய்த் துறை சார்பில், மேற்கொள் ளப்பட்டு வரும் பணிகள், நிலுவையில் உள்ள மனுக் கள், மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார்.
பின்னர் சமத்துவ பொங்கல் விழாவில் வரு வாய்த் துறையினருக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி களில் வெற்றி பெற்ற துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர் வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அலுவ லக பணியாளர் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவ லர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகள், புத்த கங்களை வழங்கினார்.
முன்னதாக வட்டாட்சி யர் த.சுகுமார் வரவேற்றார். வட்ட சார் ஆய்வாளர் சந் தோஷ் நன்றி கூறினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாஸ்கர், வட்ட வழங்கல் அலுவலர் தி. அருள்மணி, துணை வட் டாட்சியர்கள் பாலசுப்பிர மணியன், சுப்பிரமணியன், கண்ணகி, வட்டத்துணை ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.
தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மா, பலா, வாழை என முக்கனி களின் செடிகளை கூடுதல் ஆட்சியர் நட்டு வைத்தார்.
முன்னதாக, சேதுபாவா சத்திரம் ஒன்றியம், மனோரா வில், இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட வுள்ள, அரியவகை கடல் வாழ் தாவர உண்ணி உயிரி னமான கடல் பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தார்.