districts

img

அறிவியல் இயக்க வழிகாட்டி முகாம்

கரூர், ஆக.9-

      தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட 31 ஆவது தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாட்டு, வழிகாட்டி ஆசி ரியர் பயிற்சி முகாம் வெண்ணமலை சேரன்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.

     அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் வி.பழனியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜ. ஜெயராஜ் வரவேற்றார். மாவட்டச் செயலா ளர் ஐ.ஜான்பாஷா பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசினார்.  

    மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தியாக ராஜன், மாவட்ட கருத்தாளர்கள் வி.ஆரோக்  கிய பிரேம்குமார், பெ.தனபால், த.திலக வதி, ஜ.ஜெயராஜ், எஸ்.திலகவதி ஆகி யோர் பல்வேறு தலைப்புகளில் உரை யாற்றினர். முகாமில் அரசு, அரசு உதவி  பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

    ஆக.15 அன்று அனைத்து ஆய்வுகளை யும் பதிவு செய்திருக்க வேண்டும். ஒரு ஆய்வுக்கு, இரண்டு மாணவர்களும், ஒரு  வழிகாட்டி ஆசிரியரும் பங்கேற்க வேண்  டும். தங்களது ஆய்வுகளை tnsf.co.in  என்ற செயலி மூலம் பதிவு செய்ய வேண் டும் என மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜ. ஜெயராஜ் கூறினார். ஆசிரியர் பாண்டியன்  நன்றி கூறினார்.