தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் சக்கராப்பள்ளி ஊராட்சியில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்களன்று திறந்து வைத்தார். நிகழ்வில், அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.