தஞ்சாவூர், நவ.15 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரதீபா, நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியுள்ளார். பேராவூரணி அருகே உள்ள மரக்காவ லசை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், ஜீவாலட்சுமி இவர்களது புதல்வி பிரதீபா (18). இவர் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மரக்காவலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், அத னைத் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்து தேர்ச்சி பெற்றார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்றார். அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மையத்தில் சேர்ந்து படித்தார். அரசு பள்ளி மாண வர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட் டில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இதனை அறிந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, மரக்காவல சையில் உள்ள மாணவி பிரதீபா வீட்டிற்கு நேரடியாகச் சென்று வாழ்த்து தெரிவித்து கல்வி உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.