districts

img

சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மறியல்

திருச்சிராப்பள்ளி, அக். 26- குறைந்தபட்ச பென்சன் தொகை மாதந்தோறும் ரூ.7850 வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற வர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.  ஈமச்சடங்கு நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர்  வியாழக் கிழமையன்று பல்வேறு மாவட்டங் களில் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற சாலை மறியலுக்கு மாவட்ட தலை வர் சாமிநாதன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலை வர் பெரியசாமி மற்றும் நிர்வாகி கள் பேசினர்.  மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர். அரியலூர்  அரியலூர் அண்ணாசிலை அருகே மாவட்டத் தலைவர் பழனி வேல் தலைமையில் மறியல் நடை பெற்றது.  மாவட்டச் செயலாளர் தமிழரசன், மாவட்டப் பொருளா ளர் கோவிந்தசாமி  மற்றும் பலர் கலந்துகொண்டு கைதாகினர்.  பெரம்பலூர்  பெரம்பலூர் பாலக்கரை பகு தியில் நடைபெற்ற மறியலுக்கு மாவட்ட நிர்வாகிகள் த.இளங் கோவன், ந.சரஸ்வதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செய லாளர் பி.பால்சாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கி.ஆள வந்தார் ஆகியோர்  பேசினர்.