தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த இராஜகிரி முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் சார்பில் பெரிய பள்ளி வாசலில் ஏழ்மை நிலையிலுள்ள இராஜகிரி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 750 பேருக்கு ரமலான் அன்பளிப்பாக சேலை, கைலி, பாசுமதி அரிசி வழங்கப்பட்டன. இதில் வெல்பேர் தலைவர் காசிம், பெரிய பள்ளித் தலைவர் யூசுப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.