சென்னை, ஜூன் 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திருச்சி அருகே மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த இலுப்பூர் கோட் டாட்சியர் மற்றும் அலுவலர்கள் இரு வர் மீது லாரி ஏற்ற முயன்ற கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
கடந்த, வெள்ளிக்கிழமை இரவு திருச்சி அருகே அன்னவாசல் பகுதி யில் மணல் கடத்தல் நடப்பதாக அப் பகுதி கோட்டாட்சியர் தெய்வநாய கிக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே நேரில் சென்ற அவர் வளயப் பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகே மணல் ஏற்றி வந்த லாரியை , விசா ரணைக்காக நிறுத்த சைகை செய் தார். ஆனால், அந்த லாரி அவரது காரை மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் ஆர்.டி.ஓ தெய்வநாயகி, அவரின் உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் ஓட்டுநர் கனகராஜ் ஆகியோ ருடன் காயமின்றி தப்பினர்.
லாரியை இயக்கிய இருவரும் வாகனத்தை விட்டுவிட்டு ஓடியுள்ள னர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்தர காவல்துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் காவனூரிப்பட்டியைச் சேர்ந்த கே.சுந்தரம் மற்றும் வி.சங்கர் ஆகிய இருவரையும் குற்றவாளி களாக அடையாளம் கண்டுள்ளனர்.
மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவது முதல் முறை அல்ல. எனவே இந்த வழக்கை கொலை முயற்சியாக பதிவு செய்து குற்றவாளிகளை கடுமையாக தண் டிப்பதுடன், மணல் கொள்ளை கும் பலை எதிர்கொள்ளச் செல்லும் அதி காரிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும் எனவும் சிபிஎம் மாநில செயற்குழுவின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட் டுக் கொள்கிறோம்.