திருச்சிராப்பள்ளி, ஜன.12- திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திரு வாரூர், புதுக்கோட்டை, மயிலாடு துறை, அரியலூர் உள்ளிட்ட ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர கம், மாநகராட்சி, ஊராட்சி அலுவல கங்களில் வெள்ளிக்கிழமை சமத்துவ பொங்கல் விழாக்கள் நடைபெற்றன. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சிய ரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் கொண்டாடி அரசு அலுவலர் களுக்கான விளையாட்டுப் போட்டி களை துவக்கி வைத்து பார்வையிட் டார். விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அரசுத்துறை உயர் அலுவ லர்கள், பணியாளர்கள் கலந்து கொண் டனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம், அம்மையப் பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று லாத் துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசு கள் வழங்கி பொங்கல் தெரிவித்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமம் சார்பாக தமிழரின் பண்பாடு மற்றும் பாரம்பரிய மரபுகளை மீட்டெடுக் கும் வகையில் மண்பானையில் பொங்க லிட வலியுறுத்தி சேந்தமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி வரை விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு நேதாஜி கல்வி குழு மத்தின் நிறுவனர்/ தாளாளர் முனை வர் வெங்கட்ராஜூலு தலைமை வகித்தார். மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் ஜெயக்குமார், சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத் தார். இதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்விக் குழுமத்தின் இயக்குந ரும், மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி தாளாளருமான த.விஜயசுந்த ரம், நிர்வாக அலுவலர் சீதாகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா, வெளிநாட்டி னர் மற்றும் அரசு அலுவலர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண் டாடினர்.
அறந்தாங்கி
ஆவுடையார்கோயிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந் தாங்கி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் (பொ) பாலமுருகன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாண வர்கள் பொங்கல் வைத்து கொண்டா டினர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்க ளின் தலைவர் மற்றும் நிர்வாக அறங் காவலர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியி யல் கல்லூரியின் முதல்வர் ப.சுப்ரமணி யன் வாழ்த்திப் பேசினர். விழாவில், தமிழ்நாடு அரசு சிறப்பு தில்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் சிறப்புரையாற்றி னார். பேராவூரணி அருகே உள்ள செரு வாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில், வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.அருள் தலைமையில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. முன்னாள் வட்டார மருத்துவ அலுவ லர் டாக்டர் வி.சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பாபநாசம்
மெலட்டூர் அருகே கொத்தங்குடி யில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி மன்ற அலுவலக வளா கத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, துணைத் தலைவர் குமார் மற்றும் கிராமமக்கள் பங்கேற்றனர். ஆபிதீன் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பள்ளித் தாளாளர் காஜா முகையதீன் வரவேற்றார். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சிறப்புரை யாற்றினார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, துணைத் தலை வர் பூபதி ராஜா, பள்ளி தலைமையா சிரியர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
அரியலூர்
அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமத்து வப் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அஸ்தினாபுரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியிலும் பொங் கல் விழா நடைபெற்றது. அரியலூர் அரசு கலைக் கல்லூரி யில், அனைத்து துறைகளின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடை பெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல் வர் டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்தார். கீழப்பழுவூரை அடுத்த மீரா மகளிர் கல்லூரி, ஜெயங்கொண்டம் அரசு கல்லூரிகளிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஹெலன் ஹெல்லர் பள்ளி
ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு ஹெலன் ஹெல்லர் செவித்திறன் குறை யுடையோர் பள்ளியில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன் னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழாவினை சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்து மாணவ, மாணவி களுக்கு சீருடை வழங்கினார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் பொறை யார் த.பே.மா.லு கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ஜான்சன் ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்ற விழாவில் பெத்லகேம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங், தலைமை யாசிரியர் துரை.நாகராஜன் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன் பரிசுகளை யும், கேடயங்களையும் வழங்கினார். முன்னதாக பொங்கல் பண்டி கையை சிறப்பிக்கும் விதமாக மாட்டு வண்டியை பேராசிரியர் சேவியர் செல்வகுமார் ஓட்டி வந்து சிறப்பித் தார். விழாவில் தரங்கம்பாடி பேரூ ராட்சித் தலைவர் சுகுணசங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரிகளில் நடந்த இந்நி கழ்ச்சிகளில், தப்பாட்டம், சிலம்பாட் டம், கரகாட்டம், மயிலாட்டம், பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமியப் போட்டிகள் நடத்தப் பட்டன.
காமெடியான கயிறு இழுத்தல் போட்டி
தஞ்சாவூர் மாநகராட்சியில் வெள்ளியன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்டோர் தலைமை வகித்து, பொங்கல் வைத்து விழாவை துவங்கி வைத்தனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் மாநகராட்சி அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கயிறு இழுக்கும் போட்டியில் மேயர் சண்.ராமநாதன் தலைமையில், ஆண் பணியாளர்கள் ஒரு அணியாகவும், துணைமேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் பெண் பணியாளர்கள் ஒரு அணியாகவும் போட்டியை துவங்கினர். போட்டியில் கயிற்றை இழுத்த சிறிது நேரத்தில் கயிறு அறுந்து மேயர், துணை மேயர், ஆணையர் என அனைவரும் கீழே விழுந்தனர். பின்பு மேயர், துணை மேயர் உள்ளிட்ட அலுவலர்கள் சிரித்தபடியே வேறு போட்டிக்குச் சென்றனர்.