districts

img

உலக காடுகள் தினம்: விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், மார்ச் 24-  உலக காடுகள் தினத்தை யொட்டி ஆர்.வி.எஸ் வேளா ண்மைக் கல்லூரி, மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி தோழகிரிப்பட்டியில் நடந்தது. தொடர்ந்து, மரக்கன்றுகள் நடவு  செய்யப்பட்டன.  உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள் உள்ளன. காடு  என்பது வெறும் மரங்கள் மட்டு மல்ல, இது வாழ்க்கை கட்ட மைப்பில் ஒன்று. மரங்கள் மற்றும் பிற தாவரங்கள் அடர்த்தி யாகவும், அதை சார்ந்த உயிரி னங்களும் வாழும் இடம் காடு.  காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும்,  காடு களை பாதுகாக்க வேண்டியது குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் ஐ.நா.சபை சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி, இளம் அறிவியல் நான்காம் ஆண்டு   மாணவிகள் சார்பில் விழிப்பு ணர்வு பேரணி தோழகிரிப்பட்டி யில் நடந்தது. பேரணியை ஊராட்சி மன்றத் தலைவர் கோகிலா சிவகுமார் துவக்கி வைத்தார். இப்பேரணியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 120 பேர் கலந்து கொண்டனர்.  தோழகிரிப்பட்டியில், ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா சிவகுமார் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடவு  செய்தார். பிறகு, மாணவிகள் 11 பேர் விதைப் பந்துகளை பள்ளி மாணவர்களிடம் கொடுத்து, அவை நீர்நிலைகள், கிராமப் பகுதிகளில் விதைக்கப்பட்டன.