districts

img

விருதுநகரில் 14 மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவி நிதி

விருதுநகர், ஜூன் 27- விருதுநகரில் பகத்சிங் கல்வி உதவி மையம் சார்  பில் 14 ஏழை, எளிய குடும்  பங்களைச் சேர்ந்த மாணவ,  மாணவிகளுக்கு ரூ.50ஆயி ரம் அளவில் கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது. விருதுநகரில் உள்ள தியாகி பி.ஜே.சந்துரு நினை வகத்தில் நடைபெற்ற இந்  நிகழ்ச்சிக்கு பி.ராஜா தலை மை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எல்.முருகன், நகர்மன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  உதவி நிதியினை ஒருங்கி ணைப்பாளர் ஆர்.மாரிக் கனி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத்  ஆகியோர் வழங்கினர். முடி வில் வாலிபர் சங்க நகரச் செயலாளர் ஆர்.தீபக்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாதர் சங்க நகரத் தலைவர் ஐ. ஜெயா, வாலிபர் சங்க நிர்வா கிகள் சத்யா, சத்தியஜித், ஜீவா மற்றும் மாணவ, மாண விகளின் பெற்றோர்கள் பங்  கேற்றனர்.