மயிலாடுதுறை, நவ.22 - மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த அதீத கன மழையால் ஒட்டுமொத்த சம்பா நெற்பயிர்களும் நீரில் மூழ்கி அழுகி நாசமாகிவிட்டன. அன்றாட விவசாய கூலி வேலைகளை நம்பியுள்ள தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சூழலில் பாதிக்கப்பட்ட விவ சாயிகளின் சம்பா நெற்பயிர்க ளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயி ரமும், விவசாய கூலி தொழி லாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் நிவாரண மாக வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் இணைந்து மனு கொடுக்கும் போராட்டம் நடத்தின. மயிலாடுதுறை ஆட்சியர் அலு வலகம் முன்பு செவ்வாயன்று நடை பெற்ற போராட்டத்திற்கு இரு சங்கங்களின் மாவட்ட தலைவர் கள் டி.சிம்சன், காபிரியேல் ஆகி யோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலா ளர் எஸ்.துரைராஜ், விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், டெல்டா பாசனதாரர் கள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.அன்பழகன், வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் வாணிதாஸ், இயற்கை விவசாயி அ.இராமலிங்கம், தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.முருகன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மயிலாடுதுறை, சீர்காழி, தரங் கம்பாடி, கொள்ளிடம், செம்பனார் கோவில் ஒன்றியங்களின் தலை வர், செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட விவசாயி கள், விவசாய தொழிலாளர்கள் மனுக்களை அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்தி ருந்த நிலையில், மனுக்களை பெற்று கொள்ளாமல் ஆட்சியர் புறக்கணித்து சென்றுவிட்டார். இதனால் அதிருப்தியடைந்த போராட்டக்காரர்கள் ஆட்சியர் வரும் வரை காத்திருக்கிறோம் என தொடர் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். ஆனால், வெகு நேரமாகியும் மாவட்ட ஆட்சியர் வராததால் அலுவலகத்தில் மனுக்களை அளித்துச் சென்றனர். மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம்
மாவட்டம் முழுவதும் கனமழை யால் விவசாய நிலங்களெல்லாம் நீரில் மூழ்கி நெற்பயிர்கள், தோட்ட பயிர்கள் என ஒட்டுமொத்த மாக நாசமாகி விட்டது. குடியிருப்பு களை சுற்றி தண்ணீர் சூழ்ந்தும், ஏழைகளின் குடிசைகள் இடிந்தும், சேதமடைந்தும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, மாணவர்களின் பாட நோட்டு புத்தகங்கள் என அடிப்படை ஆதாரங்களெல்லாம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சேதமடைந்தி ருந்த தொகுப்பு வீடுகளெல்லாம் கனமழையால் மேலும் சேதமடைந்து அச்சுறுத்தி வரும் சூழலில், அதையெல்லாம் கண்டு கொள்ளாத மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலட்சியமாக செயல்படுகிறார். பாதிப்புகள் குறித்து முறையான ஆய்வுகளை நடத்தவில்லையென ஆட்சியர் மீது குற்றம்சாட்டி கண்டன முழக்கமிட்டனர்.