ரோட்டோவேட்டர் கருவி வழங்கல்
பாபநாசம், நவ.12 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் 2022- 23-ன் கீழ் ரோட்டோவேட்டர் கருவி மானியத்தில் வழங்கப் பட்டது. இதன்படி மகளிர் மற்றும் பட்டியல் இன விவசாயி களுக்கு ரூ.42,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச் சத்து பாது காப்பு திட்ட ஆலோசகர் இளஞ்செழியன், உதவியாளர் சத்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கும், திருவை யாறை சேர்ந்த ஒரு பெண் விவசாயிக்கும் ரோட்டோவேட் டர் கருவி வழங்கப்பட்டது. மாற்று பயிர் சாகுபடி திட்டத் தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து மற்றும் டிஏபி உரம் வழங்கப்பட்டது.
தமிழ் பல்கலை. மாணவர்கள் 10 ஆயிரம் பனை விதைகள் நடவு
தஞ்சாவூர், நவ.12- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் இணைந்து, திருவை யாறு காவிரிக் கரையில் பனை விதைகளை நடவு செய்தனர். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். பல்கலைக்கழக மாணவர்கள் பத்தாயிரம் பனைமர விதைகளை நட்டு வைத்தனர். மேலும், தமிழ்ப் பல்கலைக்கழக மொழி புலத்தில் மொழிப்புல முதன்மையர் பேரா ச.கவிதா ஏற்பாட் டில், துணைவேந்தரின் ‘ஒரு மாணவருக்கு ஒரு மரம்’ என்ற திட்டத்தின் மூலம், துணைவேந்தர் தலைமையில் பல்கலைக்கழக மாணவர்கள் தென்னை மரக்கன்றுகள் நட்டனர். நாடகத்துறையில் உள்ள கூத்துக்களரி திறந்த வெளி யரங்கில் ஐந்நூறு பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்றது. ஒருங்கிணைப் பாளர் முனைவர் ஞா.பழனிவேலு மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற பேராசிரியர் தற்கொலை
திருச்சிராப்பள்ளி, நவ.12 - திருச்சி கருமண்டபம் ஜெயாநகர் விஸ்தரிப்பு வசந்த நகரைச் சேர்ந்தவர் ஆனந்த நாராயணன் (63). இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தேவி (62), சுற்றுலா துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்க ளது ஒரே மகள், கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் உயிரிழந்துவிட்டார். இதனால் அனந்த நாராய ணன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி தேவி கொடுத்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சி மாநகர ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
திருச்சிராப்பள்ளி, நவ.12 - திருச்சி மாநகரில் ஊர்காவல் படையை சேர்ந்த ஆளிநர்கள், முக்கிய நபர்கள் வருகையின் போது பாது காப்பு, போக்குவரத்தை சீர்செய்தல், இரவு ரோந்தின் போது காவலர்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் என பல்வேறு வகையில் திறம்பட செயல்பட்டு வருகின்ற னர். திருச்சி மாநகரில் ஊர் காவல்படையை வலுப்படுத் தும் வகையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 23 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 28 காலிப் பணியிடங் கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர ஊர் காவல்படை யில் சேர விரும்பும், தகுதியுடைய நபர்களுக்கு தேர்வு நடைபெற்றது. 28 காலிப் பணியிடங்களுக்கு 94 ஆண்க ளும், 19 பெண்கள் என மொத்தம் 113 பேர் கலந்து கொண்ட னர். இந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர்களின் எடை, உயரம், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
திருச்சி விமான நிலையத்தில் 400 கிராம் தங்கம் பறிமுதல்
திருச்சிராப்பள்ளி, நவ.12 - சார்ஜாவிலிருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. அதில் வந்த பயணி களையும், அவர்களது உடமைகளையும் சுங்கத் துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண் டனர். இதில் பயணி ஒருவர் அவரது பெட்டியில் உள்ள கைப்பிடிக்குள் கம்பி வடிவில் 400 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை யடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து, அந்த பயணி யிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.21.23 லட்சம்.
தேங்கிய மழைநீரை உடனே அகற்ற வேண்டும்: எம்எல்ஏ
கும்பகோணம், நவ.12 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கும்பகோணம் தொகுதிக் குட்பட்ட பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், சனிக்கிழமை முழு வதும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெரு, காந்தியடிகள் சாலை, மணிக்கூண்டு, மேட்டுத்தெரு, புதிய பேருந்து நிலையம், காந்தி பூங்கா- நகர மேல்நிலைப் பள்ளி சாலை, மார்னிங் ஸ்டார் பள்ளி சாலை, மடத்துத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுத்து மழைநீர் தேங்காதவாறு, தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் வசதி களை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார். பாதிக்கப்பட்ட இடங்களில் மழைநீர் வடிய வைக்கும் பணியினை முடுக்கிவிட்டார்.
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
அறந்தாங்கி, நவ.12 - அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய 9- வது மாநாடு சுப்பிரமணியபுரம் கற்பகம் விழா அரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஏ.செல்லமுத்து தலைமை வகித்தார். மேகவர்ணம் மாநாட்டு கொடியேற்றினார். ஆர்.ராதா வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் வே.வீரையா துவக்க உரை யாற்றினார். வி.தொ.ச ஒன்றிய செயலா ளர் வீ.ராசு வேலை அறிக்கை சமர்ப்பித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, மாவட்ட குழு உறுப்பினர் கே. தங்கராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கர்ணா, சிபிஎம் வழக்கறிஞர் பிரிவு அலாவுதீன், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் கவிபாலா, சிபிஎம் செய லாளர் கணேசன், வி.ச. ஒன்றிய செயலா ளர் நாராயணமூர்த்தி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ். இந்துராணி, ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஒன்றியத்தின் புதிய தலைவராக ஏ.செல்லமுத்து, செயலாளராக வீ.ராசு, பொருளாளராக எம்.தர்மராஜ், துணைத் தலைவராக எஸ்.இருதய ராஜ், துணைச் செயலாளராக ஏ.ஜான் உட்பட 9 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொருளா ளர் எஸ்.சங்கர் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். நூறு நாள் வேலையை 150 நாட்க ளாக மாற்றி ரூ.300 கூலி வழங்க வேண்டும். அறந்தாங்கி ஒன்றியத்தில் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசா யிகளுக்கும் தாமதமின்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடியி ருந்து வரும் ஏழைகளுக்கு குடியிருக்க இடமும் குடிமனைப் பட்டாவும் வழங்க வேண்டும். அரசு புறம்போக்கு இடங்க ளில் பல ஆண்டுகளாக வீடுகட்டி குடியி ருந்து வரும் ஏழைகளுக்கு உடனடி யாக பட்டா வழங்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியோரை அலைக்கழிக்காமல் உதவித்தொகை வழங்க வேண்டும். கூட்டுறவு அங்காடி யில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் களுக்கு வழங்கிய 35 கிலோ அரிசியை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தர்மராஜ் நன்றி கூறினார்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரும் முதல்வரின் கோரிக்கை நியாயமானது திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
புதுக்கோட்டை, நவ.12 - பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கை நியாயமானது. அதை ஏற்று நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட இருசக்கர வாகனம் நிறுத்தும் கூடத்தை சனிக்கிழமை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திண்டுக்கல் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது பட்டியலில் உள்ள கல்வியால் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. எனவே அதை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். கோவையில் நடைபெற்றுள்ள சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி சிறுபான்மை மக்களை உள்நோக்கத்தோடு அச்சுறுத்துவதை அனுமதிக்கக் கூடாது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை குறித்து ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைபாடு இருக்கும். 6 பேர் விடுதலையை வைத்து கூட்டணி அமைக்கவில்லை. ஒரே கருத்தாக இருந்தால் வேறுவேறு கட்சிகள் இருக்கத் தேவையில்லை ஒரே கட்சிகளாக இருந்துவிடும். இதனால் கூட்டணிக்குள் விரிசல் எதுவும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணை வழங்கல்
தஞ்சாவூர், நவ.12 - தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளியன்று அவ்வலு வலகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் உள்ளூரைச் சேர்ந்த 7 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 75-க்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு படித்த இளைஞர்கள், பெண்கள் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு நிறுவனங்களைத் தேர்வு செய்து முகா மில் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஜி.குழந்தைவேல் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர். இதில் 25 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நவ.18 வரை மாணவர் சேர்க்கை
மன்னார்குடி, நவ.12 - தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 18.11.2022 வரை மாணவர் சேர்க்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கூத்தாநல்லூர் அரசு மகளிர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாணவியர் சேர்க்கை துவங்கி யுள்ளது. மாணவியர் அல்லது அவர்களின் பெற்றோர்கள் கல்லூரியின் முதல்வரை உடனே அணுகுமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது. மன்னார்குடி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் சனிக்கிழமை முதல் மாணவ-மாணவியர் சேர்க்கை துவங்கியுள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சரால் 11.11.2022 அன்று கல்லூரி கல்வி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், தற்போது பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், அம்மாணவர்களும் பயன்பெறும் வகையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளில் நேரிடையாக விண்ணப்பங்களை வழங்க வேண்டும். அந்த காலியிடங்களில் உரிய விதிகளை பின்பற்றி 18.11.2022 வரை மாணவர்களை சேர்க்கை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் சேர்க்கை முகாம்
பொன்னமராவதி, நவ.12 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் 107 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்தது. பொன்னமராவதி, அரச மலை, காரையூர், திருக்களம்பூர், வார்பட்டு, வேந்தன்பட்டி, மேலைச்சிவ புரி, வேகுப்பட்டி, உசிலம்பட்டி, கொப்பனாபட்டி, ஆலவயல், மைலாப்பூர், கண்டியாநத்தம், அம்மன்குறிச்சி, கல்லம்பட்டி, நகரப்பட்டி, மரவாமதுரை, ஒலியமங்களம், மேலத்தானியம், கீழத்தானியம், முள்ளிப்பட்டி, கொன்னை யம்பட்டி, இடையாத்தூர், நல்லூர், கூடலூர், வாழைக்குறிச்சி, நெறிஞ்சிக் குடி, சேரனூர், செவலூர், கோவணூர், மேலநிலை, செம்பூதி, கொன்னைப் பட்டி, சுந்தரம், காட்டுப்பட்டி, தூத்தூர், தேனூர், உட்பட 107 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், நீக்கம் போன்றவை நடைபெற்றன. வாக்குச்சாவடி அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். புதுக் கோட்டை மாவட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சர வணன், கோவணூர் வாக்குச்சாவடியில் ஆய்வு செய்தார்.
உணவகத்தை சூறையாடிய மூவர் கைது
தஞ்சாவூர், நவ.12 - தஞ்சாவூர் கரந்தை பகுதியைச் சேர்ந்தவர் சிராஜூதீன் (47). இவர் அதே பகுதியில் தீன் சிக்கன் கார்னர் என்ற துரித உணவகம் ஒன்றை வைத்துள்ளார். இவருடைய கடையில் வியாழக்கிழமை இரவு இளை ஞர் ஒருவர் சிக்கன் ரைஸ் கேட்டுள்ளார். அப்போது, உணவு தயாரிப்பவர், “உங்களுக்கு முன்பு கேட்டவருக்கு கொடுத்து விட்டு, உங்களுக்கு தயார் செய்து தருகிறேன்” என கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே சிராஜூதீன் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்து விட்டார். அதன் பின்னர் அந்த இளைஞர் தனது நண்பர்கள் இருவரை அழைத்து வந்து அடுப்பு, எண்ணெய், முட்டை, சிக்கன், புரோட்டா ஆகிய வற்றை சாலையில் தூக்கி வீசி உடைத்துள்ளனர். பின்னர், அவர்கள் சிராஜூதீனுக்கு சொந்தமான மற்றொரு உணவகத்துக்குச் சென்று அங்கி ருந்த உணவுப் பொருட்களையும் கீழே கொட்டி சூறையாடினர். இதை தட்டிக்கேட்ட சிராஜூதீனின் மண்டையை உடைத்துள்ளனர். ரத்தம் காயம் ஏற்பட்ட சிராஜூதினை அக்கம்பக்கத்தினர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதன் பேரில், கரந்தை குளத்து மேட்டுதெருவை சேர்ந்த சரண்ராஜ்(22), கீரைக்கார தெருவை சேர்ந்த விக்கி(23), பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்த கிறிஸ்தவராஜ் (27) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காசிக்கு புனிதப் பயணம் சென்ற 42 பேர் தவிப்பு பத்திரமாக மீட்ட தஞ்சை மாவட்ட நிர்வாகம்
தஞ்சாவூர், நவ.12 - தஞ்சாவூரிலிருந்து, காசிக்கு புனிதப் பயணம் சென்று, நான்கு நாட்களாக வாரணா சியில் தவித்து வந்த 42 பேரை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பத்திரமாக மீட்டு அழைத்து வந்துள்ளனர். தஞ்சாவூரிலிருந்து 116 பேர் கடந்த அக்.30 ஆம் தேதி இரவு காசிக்கு புனித யாத்திரை சென்றனர். அவர்களை தஞ்சாவூ ரைச் சேர்ந்த அஞ்சலிதேவி என்பவர், பேருந்தில் சென்னை அழைத்துச் சென்று பாலாஜி என்ற முகவரிடம் ஒப்படைத்து உள்ளார். பாலாஜி அனைவரிடமும் தலா 10 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு, ரயில் மூலம் காசிக்கு அழைத்து சென்றுள்ளார். காசியில் தரிசனம் முடித்து விட்டு அனைவரையும் வார ணாசி ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு தலை மறைவாகி விட்டார். இவர்களில் சிலர் தங்கள் சொந்தப் பணத்தை கொண்டு டிக்கெட் எடுத்து ஊர் திரும்பினர். இதில், 42 பேர் பணம் இல்லாமலும், ஊர் திரும்ப வழி தெரியாமல், மொழி புரியாமல், பசி, பட்டினியோடு நான்கு நாட்களாக வாரணாசி ரயில் நிலையத்தில் தவித்து வந்துள்ளனர். வாரணாசியில் தமிழ் தெரிந்த நபர் ஒருவர் இவர்களது நிலைமையை அறிந்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை தொடர்பு கொண்ட பின், அவர்களுக்கு ரயிலில் டிக்கெட் எடுத்து கொடுத்து, உணவு அளித்து, வாரணாசியில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னை வந்து இறங்கிய அனைவரை யும் சிறப்பு பேருந்து மூலம் தஞ்சாவூர் அழைத்து வர தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஏற்பாடு செய்தி ருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அனைவரும் பாதுகாப்பாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.
கொத்தங்குடி ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு மனைப் பட்டா வழங்குவதில் தாமதம் ஏன்?
கும்பகோணம், நவ.12 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம் நடைபெற்றது. கிளை செய லாளர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் அருளரசன், மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொத்தங்குடி ஊராட்சி யில் கடந்த 30 வருடங்களாக ஆதிதிராவிடர் தெருவில் உள்ள சுமார் 80 வீடுகளுக்கு, அரசு வீடு கட்டித் தந்தும் அவர்களுக்கு இதுவரை குடிமனைப் பட்டா வழங்கப் படவில்லை. இது சம்பந்த மாக மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிக ளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை கிடைக்கப் பெறாமல் உள்ளது. இத னால் அப்பகுதி மக்கள் இருப்பிடச் சான்று மற்றும் அரசின் பல்வேறு சலுகை களை பெற முடியாமல் உள்ளனர். எனவே சம்பந் தப்பட்ட அதிகாரிகள் குடி மனை பட்டா வழங்க வேண்டும். கொத்தங்குடி - தேவ னாஞ்சேரி சாலையில் இரு புறமும் பள்ளங்கள் ஏற்பட்டு தினந்தோறும் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. சாலையின் இரு புறம் செம்மண் கொட்ட முறையிட்டும், இதுவரை நட வடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டால் போதிய நிதி ஒதுக்கப்படாத தால், கொட்டப்படவில்லை என தகவல் வருகிறது. எனவே மேற்கண்ட பிரச்ச னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.