மதுரை, ஜூன். 5-
எழுத்தாளரும், தொழிற்சங்கத் தலைவ ரும், கைரேகைச் சட்டத்தை எதிர்த்து வழக் காடி வெற்றி கண்டவருமான “ரோசாப்பூத் துரை” என்ற பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பின் 136-ஆம் ஆண்டு பிறந்த நாள் திங்களன்று மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன் தலை மையில் நடைபெற்றது மதுரை யானைக் கல்லில் உள்ள அன்னாரது உருவச் சிலைக்கு மாலையணிவித்து புகழஞ்சலி செலுத்தப் பட்டது.
நிகழ்வில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், துணை மேயர் டி. நாகரா ஜன், தெற்கு மண்டலத் தலைவர் எம்.முகேஷ் சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், மாவட் டக்குழு உறுப்பினர் ஏ.பாலு, அருட்தந்தை யர்கள் பெனடிக்ட் பர்ணபாஸ், எஸ்.லாரன்ஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலத் தலைவர் பி.வி.கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் எம்.டி.ராஜ்குமார் பெருங்காமநல்லூர் வீர மங்கை மாயக்காள் மகளிர் சங்கத் தலை வர் செல்வ பிரிதா, மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் என்.கணேசமூர்த்தி, பொருளாளர் எம்.ஜான் சன், எஸ்.எம்.லூர்துரூபி. ரசூல், ஜே. எகியா, ஏ.போனிபாஸ், கே.பி.சுப்பையா, எஸ்.என்.நவாஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.