தஞ்சாவூர், ஜன.18 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், ஒட்டங்காடு ஊராட்சி, கட்டையங் காடு - மதன்பட்டவூர் சாலை ரூ.31.36 லட்சம் மதிப்பீட்டிலும், ஒட்டங்காடு - கோரவயல் காடு சாலை ரூ.33.46 லட்சம் மதிப்பீட்டிலும் முதலமைச்சர் கிராமச் சாலைகள் மேம் பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி பொய்யாமொழி, பேராவூரணி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், பேரா வூரணி நகரச் செயலர் என்.எஸ்.சேகர், ஊராட்சி மன்றத்தலைவர் ராசாக்கண்ணு, ஒன்றியக் குழு உறுப்பினர் பாக்கியம், அ.அப்துல் ஜபார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.