திருவாரூர், அக்.18 - திருவாரூர் ஒன்றியம், பின்னவாசல் ஊராட்சியில் நூறு நாள் வேலைக்கான கூலி வழங்காததை கண்டித்தும், மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்களுக்கு பணம் வழங்கிட கோரியும் பின்னவாசல் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, விவசா யத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் வி.ராஜாங்கம், ஒன்றியக் குழு உறுப்பி னரும், ஊராட்சி மன்றத் தலைவருமான டி.ஆர்.தியாகராஜன், கட்சியின் மூத்த உறுப் பினர் பி.மாதவன், ஒன்றியக் குழு உறுப்பி னர் எஸ்.ரகுபதி, கிளைச் செயலாளர் டி. சின்னையன், மாதர் சங்க ஒன்றியக் குழு உறுப்பினர் திரிபுரா உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த, திருவாரூர் மாவட்ட துணை காவல் கண்கா ணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நூறு நாள் வேலைக்கான சம்பள பாக்கியை 10 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்ட பயனாளிகள் குறித்து கள ஆய்வு செய்து, தகுதியான பயனாளி களுக்கு உரிமைத்தொகை கிடைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதி யளித்தார். இதையடுத்து சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.