பாபநாசம், பிப்.15- பாபநாசம் - சாலியமங்கலம் சாலை வழியாக, பாபநாசம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், தாலுகா, கோர்ட், சார் பதிவகம், கருவூலம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்டவற்றுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்தச் சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சர்ச் உள்ளன. இந்த சாலையில் உள்ளன. இந்தச் சாலை புதிதாக போடப்பட்டுள்ளது. புதிதாகப் போட்ட சாலையை கொத்தி விட்டு போடாமல், பழைய சாலை மீதே புதிய சாலை போடப்பட்டுள்ளது. இதனால், சாலை மேலே உயர்ந்து, சாலையை ஒட்டியுள்ள கடைகள் கீழே போய் விட்டன. இதனால் மழை நாட்களில் மழை நீர் கடைகளுக்குள் புகுந்து விடும் என்கின்றனர் கடை உரிமையாளர்கள். இதை கவனிக்காமல் நெடுஞ்சாலைத் துறை அவசர கதியில் சாலை அமைத்ததால், போட்டதால் பாதிக்கப்படப் போவது கடை உரிமையாளர்கள்தான். மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் கடை உரிமையாளர்கள். பட விளக்கம்: பாபநாசம் - சாலியமங்கலம் புதிதாக போட்ட சாலையால் சாலையை ஒட்டிய கடைகள் கீழே போய் விட்டன.