தஞ்சாவூர், மே 18-
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதா ரணக் கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் மு.கி.முத்துமாணிக் கம் தலைமையில் நடைபெற் றது. வட்டார வளர்ச்சி அலு வலர் கிருஷ்ணமூர்த்தி, சடை யப்பன் முன்னிலை வகித்த னர்.
இதில் சாலை வசதி, பள்ளி, அங்கன்வாடி கட்டிட வசதி, சுற்றுச்சுவர் அமைத் தல், குடிநீர் வசதி, கட்டிடம் பழுது நீக்குதல், முகத்துவா ரங்களை தூர்வாருதல், பள் ளியில் சாய்தளம் அமைத் தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு ஒன்றி யக் குழுத் தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் பதில் அளித்து பேசினார்.
கூட்டத்தில், சேதுபாவா சத்திரம் ஒன்றியத்தில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கான முதல் கட்டமாக ரூ.8.5 கோடி ஒதுக்கீடு செய்தமைக்கும், மனோராவை தலைமையிட மாகக் கொண்டு இந்தியா விலேயே முதல் முறையாக அரியவகை கடல் வாழ் தாவர உண்ணியான கடல் பசு விற்கு ரூ.15 கோடியில் பாது காப்பு மையம் அமைத்த தற்கும், அடைக்கத்தேவன், காரங்குடா, சம்பைபட்டி னம், பிள்ளையார் திடல் ஆகிய கடற்பகுதிகளில், ஆற்று முகத்துவாரங்களை தூர் வாருவதற்கு ரூ.3.97 கோடி ஒதுக்கீடு செய்தமைக் கும், 9 பள்ளி கட்டிடங்கள் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் அமைத்து தந்தமைக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோரிக்கை
பின்னர் ஒன்றியக் குழு தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் கூறுகையில், ‘‘சேதுபாவாசத்திரம் ஒன்றி யத்தில், கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க வும், ஊமத்தநாடு - விளங் குளம் பகுதியில் இணைப்பு பாலம் அமைக்கவும், ரெண் டாம்புளிக்காடு- பாப்பாங் கண்ணி ஆற்றின் குறுக்கே பூங்குடிக்காடு கரம்பக்காடு பாலம் அமைக்கவும், பாலச் சேரிக்காடு - கரம்பக்காடு தரைப் பாலத்தையும், கழனி வாசல் - ஆதனூர் தரைப் பாலத்தையும் உயர்மட்டப் பாலமாக அமைத்து தர தமிழ்நாடு முதலமைச்சர், துறை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.
இதில் ஒன்றியப் பொறி யாளர்கள் உள்ளிட்ட பல் வேறு அரசுத் துறை அலுவ லர்கள் கலந்து கொண்ட னர். ஒன்றிய மேலாளர் நாகேந் திரன் நன்றி கூறினார்.