districts

சாலை, குடிநீர், விளக்கு வசதி: பேரூராட்சியில் கோரிக்கை

மயிலாடுதுறை, மார்ச்.1- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்றம் சாதாரண கூட்டம் செவ்வாயன்று பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா  சங்கரி  தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி.கமலகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் பழுதடைந்துள்ள சாலை, குடிநீர் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைக்க கோரிக்கை வைத்தனர்.  கூட்டத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு,  பேரூராட்சி உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளை துரிதமாக செயல்  படுத்த  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, தரங்கம்பாடி மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினரை கண்டித்து பேரூ ராட்சியில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.