districts

img

“மேய்ச்சல் நிலம் ஒதுக்கித் தாருங்கள் மானிய விலையில் தீவனம் வழங்குங்கள்”

தஞ்சாவூர், பிப்.10-  சாலைகளில் திரியும் மாடுகளை  பிடித்து அபராதம் விதிக்கக் கூடாது என வலியுறுத்தி தஞ்சாவூரில் வெள்ளிக் கிழமை அன்று 50-க்கும் மேற்பட்ட மாடு களுடன், மாடுகள் வளர்ப்போர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் அடிக் கடி வாகன  விபத்துக்கள் ஏற்பட்டு உயிரி ழப்புகள் நிகழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக் கும் இடையூறாகவும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சிக் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கப்படுவதால் பாதிக்கப்படுகிறோம் எனக் கூறி வெள் ளிக்கிழமை 50-க்கும் மேற்பட்ட மாடு களுடன் அவற்றின் உரிமையாளர்கள் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த வல்லம் துணைக்  காவல் கண்காணிப்பாளர் நித்யா, தஞ்சாவூர் மேற்கு காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் காவல்துறையினர்  போ ராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையினரிடம் தஞ்சாவூர் மாநகராட்சியில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. நாங்கள் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து அவற்றின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம். பகல் நேரங்களில் மேய்ச்சலுக்காக சாலைகளில் கால்நடையாகச் செல் லும் மாடுகளை பிடிக்கக் கூடாது. இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளை வேண்டுமானால் பிடிக்கலாம். அந்தக் காலத்தில் மேய்ச்சலுக்காக  தரிசு நிலம் இருந்தது. தற்போது அவை கிடையாது. எனவே மேய்ச்சலுக்கு நிலம் ஒதுக்கித் தர வேண்டும். மாடுகள் வளர்ப்போருக்கு தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று மாடுகள் வளர்ப்போர் கூறினர். இதையடுத்து  கோரிக்கைகளை மனுவாக மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுங்கள். என்று கூறினர். இதனை ஏற்று மாட்டின் உரிமையாளர்கள் தங்க ளது மாடுகளை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் மாநகராட்சி அலுவ லகத்துக்கு சென்று மாடுகள் வளர்ப்போர் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.